நெல்லையில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. காதல் விவகாரத்தில் மாணவியின் சகோதரர் வெறிச்செயல்!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் தன் சகோதரியுடன் பேசியதற்காக மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரை 10ஆம் மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய அவலம் நேர்ந்துள்ளது. அரிவாளால் வெட்டப்பட்ட மாணவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித்திற்கு தெரிய வந்துள்ளது.

இதன்பின் சுர்ஜித், கவினிடம் பேசுவதற்காக அழைத்திருக்கிறார். இதனை நம்பி கவின் சென்ற நிலையில், சுர்ஜித் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். நெல்லை மாவட்டத்தில் நடந்த ஆணவ படுகொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதன்பின் சுர்ஜித் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்த நிலையில், அவரின் தாய் மற்றும் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டார். அதேபோல் திமுக எம்பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதுமட்டுமல்லாமல் கவின் படுகொலைக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்று உறுதி கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நெல்லையில் மீண்டும் ஆணவக் கொலை முயற்சி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தன்னுடன் படிக்கும் மாணவியுடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் 10ஆம் வகுப்பு படிக்கும் சகோதருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் சகோதரர் தனது நண்பர்களை கூட்டிச் சென்று, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். இதனால் படுகாயமடைந்த மாணவர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட 5 சிறார்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் 5 பேரையும் கைது செய்த போலீசார், சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். நெல்லை கவின் ஆணவக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சிறார்கள் அரிவாளைக் கையில் எடுத்து கொலை முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications