கடையநல்லூர் முண்டகண்ணியம்மன் கோவிலுக்கு திடீரென வந்த விஜயகாந்த் மகன்!
நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள முண்டகண்ணியம்மன் கோவிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் திடீரென வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இந்தப் பின்னணியில், தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் இன்று திடீரென்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முண்டகண்ணியம்மன் கோவிலுக்கு வந்தார்.
அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஷூ காலோடு ஆலய வளாகம் வந்த அவருக்கு ஆலய நிர்வாக பூஜாரிகள் மாலை அணிவித்து கும்பமரியாதை கொடுத்து வரவேற்றனர். ஷூவை கழட்டாத நிலையில் அவர் சாமி கும்பிட்டார். மதியம் சுமார் 2 மணி அளவில் கோவிலுக்கு வந்த அவர் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தரிசனம் செய்துவிட்டு உடனடியாக மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
தேர்தல் நெருங்கி விட்டதால், சமீபகாலமாக தென் மாவட்டங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் அரசியல் கட்சி பிரமுகர்களின் குடும்பத்தினர் மற்றும் தலைவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் வருகை பரப்பரப்பாக பேசப்படுகின்றது.
மதுரை கிடைக்கலை.. வேற தொகுதியும் சரியில்லை.. கள்ளக்குறிச்சியில் இறங்கும் பிரேமலதா!