கூலிப்படையை ஏவி கணவன் கொலை.. வழிப்பறி நாடகமாடிய மனைவி.. சங்கரன்கோவிலில் பயங்கரம்
தென்காசி: சங்கரன்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்துவிட்டு வழிப்பறி நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவசாமி (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமாரி (29) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கணவன், மனைவி இருவரும் அவர்களின் ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் வீரசிகாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்ற இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் இரவு தங்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சேந்தமரம் கிராமம் அருகே வந்த போது அங்கு காரில் வந்து அவர்களை வழிமறித்த மர்மநபர்கள் முத்துமாரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை தடுத்த வைரவசாமிக்கும், அந்த கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரும்புக் கம்பியை கொண்டு வைரவசாமியை அந்த கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிறகு நகையுடன் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் வைரவசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மனைவி முத்துமாரியிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை முத்துமாரி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவன் வைரவசாமியை கூலிப்படையை ஏவி, தான் கொலை செய்ததை முத்துமாரி ஒப்புக் கொண்டார். இதையடுத்து, முத்துமாரியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சங்கரன்கோவிலை சேர்ந்த இசக்கி என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக கணவனை கூலிப்படை ஏவி முத்துமாரி கொலை செய்தார்; சொத்துக்காக கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications