அயன் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா? கவனம் மக்களே.. திருவள்ளூரில் பள்ளி மாணவனின் உயிர் போன சோகம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விடையூர் அருகே அயன் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 9 ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
நாம் வீட்டில் தினமும் மின்சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இதனை நாம் கவனமுடன் கையாள வேண்டும். இல்லாவிட்டால் விபரீதங்கள் நடந்து விட அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் கூட நம்மில் பலரும் செல்போன் சார்ஜர், லேப்டாப், அயன் பாக்ஸ் உள்ளிட்ட தினமும் பயன்படுத்தும் பொருட்களை அலட்சியமாக கையாளுவதை வாடிக்கையாக வைத்துள்ளோம்.

குறிப்பாக ஸ்விட்சை ஆன் செய்துவிட்டு செல்போன் சார்ஜர், லேப்டாப் சார்ஜர், அயன் பாக்ஸ் உள்ளிட்டவற்றை பிளக் பாயிண்ட்டில் சொறுகுவது, அதேபோல் ஸ்விட்சை ஆப் செய்யாமல் மின்சாதன வயர்களை அப்படியே கழற்றுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம். மின்சாதன வயர்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாற்றாமல் இருப்பதும் உண்டு. இப்படியான அலட்சியம் என்பது நம் உயிரையே பறித்து விடும்.
இந்நிலையில் தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் அயன்பாக்ஸ் பள்ளி மாணவனின் உயிரை பறித்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் விடையூர் நெமிலி அகரத்தை சேர்ந்தவர் ஹரிபாபு. இவரது மகன் தீபக் குமார். இவருக்கு 14 வயது ஆகிறது. விடையூரில் உள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுகிழமையால் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை என்பது அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் தீபக் குமார் தனது பள்ளி சீருடையை இஸ்திரி செய்வதற்காக வீட்டில் அயன்பாக்ஸ் பயன்படுத்தினார். அப்போது திடீரென்று அயன் பாக்ஸில் இருந்து மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மயங்கி உள்ளார்.
இதையடுத்து குடும்பத்தினர் தீபக் குமாரை மீட்டு விடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீபக் குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விடையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் அயன் பாக்ஸ் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications