பதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்
Recommended Video
திருவள்ளூர்: திருத்தணியில் இன்று மாலை நீதிமன்றம் அருகில் வாலிபரை ஓட ஓட விரட்டிய 4 பேர் கும்பல் அவரை ஒரு ஓட்டலில் மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி உள்ளது. இந்த படுகொலை சம்பவம் திருத்தணி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் இன்று மாலை வேளையில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வீச்சருவாளுடன் வாலிபர் ஒருவரை துரத்திச் சென்றனர்.

அந்த வாலிபர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தப்பி ஓட்டினார். அங்கு வாலிபரை மடக்கிய 4 பேர் கும்பல் தலை மற்றும் கை கால்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தப்பிச்சென்ற மர்ம கும்பல் ரயில் தண்டவாளம் மற்றும் திருத்தணி நகருக்குள் ஓடியது. அவர்களை திருத்தணி போலீசார் விரட்டிச் சென்றனர் ஆனால் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திரும்பி வந்துவிட்டனர்.

இதனிடையே வெட்டுப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவில்லை மற்றும் இவரை வெட்டிய நான்கு பேர் கொண்ட கும்பல் யார் என்றும் இதுவரை தெரியவில்லை இதனிடையே வெட்டுப்பட்ட வாலிபர் திருத்தணி மருத்துமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார. இறந்த வாலிபர் 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது அவரது பிரேதம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி போலீஸ் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் யார் என்பது குறித்த தகவலும், வெட்டியவர்கள் யார் என்பது குறித்த தகவலுடன் அவரை கைது செய்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications