எடப்பாடி பேசும்போதே.. பக்கத்தில் சட்டென சரிந்த முக்கிய பிரமுகர்.. அதிமுக பிரச்சாரத்தில் பதற்றம்
திருவள்ளூர்: அதிமுக சார்பில் "மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில் பிரச்சாரம் நடந்து வருகிறது. அதன்படி எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பேசிக் கொண்டு இருந்தபோது அருகே இருந்த திருவள்ளூர் அதிமுக மாவட்ட செயலாளர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் பிரச்சாரம் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் "மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்!" என்ற பெயரில் பிரச்சாரம் நடந்து வருகிறது.

இதில் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி அவர் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தில் நின்றிருந்த மாவட்டச் செயலாளர் மயக்கமடைந்தா். எடப்பாடி பேசிக் கொண்டு இருந்தபோது சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் எடப்பாடி பழனிசாமி பேசும்போதே, அருகே நின்றிருந்த பலராமன் அசவுகரியமாக உணர்வது தெரிகிறது. இதை உணர்ந்த பாதுகாவலர்கள் அவரிடம் என்னாச்சு என கேட்கிறார்கள். அப்போது அவர் தலை சுற்றுகிறது என்பது போலச் சொல்கிறார். பிறகு சில நொடிகளில் அவர் சரியவே அங்கிருந்த செக்யூரிட்டி அவரை தாங்கி பிடித்தனர்.
இருப்பினும், நல்வாய்ப்பாக அவருக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அவருக்கு எடப்பாடி வாகனத்திலேயே முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து மீண்டும் வாகனத்தின் மீது ஏறிய பலராமன், எடப்பாடி பழனிசாமிக்கு வீர வாளை பரிசாக அளித்தார்.












Click it and Unblock the Notifications