பூரித்த பொன்னேரி.. ஒருத்தருமே வரலயாமே.. அரசு பள்ளியில் அசத்தியது யார் பாருங்க..திருவள்ளூர் ஆச்சரியம்
திருவள்ளூர்: வியக்கத்தகுந்த சம்பவம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து, மொத்த பேரையும் அசத்தி விட்டது.. இந்த செய்திதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது வஞ்சிவாக்கம் ஊராட்சி.. இங்கு ஆசானபுதூர் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது...

இந்த அரசு பள்ளியில், காமராஜர் துறைமுக சமூக மேம்பாட்டு நிதியின்கீழ், கிட்டத்தட்ட 15.60 ரூபாய் லட்சம் மதிப்பில் அரசு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.. இவைகளுடன் 7 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அதே பள்ளியில் சமையலறை கட்டிடங்களும் கட்டப்பட்டன.
என்ன காரணம்: இந்த பள்ளி கட்டிடத்தையும், சமையலறை கட்டிடத்தையும் கட்டி முடித்து, பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், இந்த கட்டிடங்கள் திறக்கப்படவில்லை.. மாணவர்களின் பயன்பாட்டிற்கும் வழங்கப்படவுமில்லை..
எனவே, கட்டி முடிக்கப்பட்ட, கட்டிடங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதும், ஒருத்தருமே இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை, கட்டிடங்களையும் திறக்கவில்லை..
பள்ளி கட்டிடம்: இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அந்த கிராம மக்கள், தாங்களே நேரடியாக அந்தப் பள்ளி கட்டிடத்தை திறந்துவைக்க முடிவு செய்தார்கள்.. இதையடுத்து கிராம மக்களும், அந்த பள்ளி மாணவர்களும் ஒன்று சேர்ந்து பள்ளியை திறக்க தயாரானார்கள்.
இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.. அனைவரும ஒன்றுசேர்ந்து சீர்வரிசை தட்டுகளுடன் மேளதாளம் முழங்க தெருக்களில் ஊர்வலமாக பள்ளிக்கு வருகை தந்தனர். கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து நின்றதுமே, பள்ளி ஆசிரியர்கள் அவர்களை தாம்பூல தட்டில் ஆரத்தி எடுத்து, அவர்களை வரவேற்றனர். அதற்கு பிறகு, பள்ளி கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழா செய்யப்பட்டது..
பூரிப்பு: இதையெல்லாம் பார்த்து, மாணவ மாணவியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிவிட்டனர்.. ஆனால், இப்போது சிக்கல் என்னவென்றால், பள்ளிக்கூடம், கிச்சன் இரண்டும் ரெடியாக உள்ளது, ஆனால், பள்ளியில் கழிவறை வசதி இல்லையாம்.. எனவே, அதனை விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விஐபிகளும், அரசியல்வாதிகளும் என காலம் காலமாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்துவரும் நடைமுறை நம்முடைய தமிழகத்தில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்களே, தங்களுக்கான பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்திருப்பது வியப்பையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications