ரேஷன் கடைகளில் பனைவெல்லம்... அரசு பரிசீலித்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திருவள்ளூர்: ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விநியோகம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நாடார் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், தாம் தினமும் பனங்கருப்பட்டியை தேநீரில் பயன்படுத்தி வருவதாகவும் ரேஷன் கடைகளில் பனைவெல்லம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது எனத் தெரிவித்தார்.

உலகம் வியக்கும் வகையில் கல்வியாலும், உழைப்பாலும் உயர்ந்தவர்கள் நாடார் சமூகத்தினர் என்றும் சொந்த நிதியில் இருந்து ரூ.35 கோடி செலவழித்து தமிழகத்திற்கு சுவாசக் கருவிகள் விநியோகம் செய்ததற்காக ஷிவ் நாடாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

முன்னதாக பூந்தமல்லியில் அதிமுகவினர் அளித்த உற்சாக வரவேற்பில் நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் நாடார் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் மேடையில் வைக்கப்பட்ட பனைவெல்லம் தொடர்பான கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications