தடையை மீறி கிராம சபை கூட்டம்.. ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் - திருவள்ளூர் எஸ்.பி
அரசின் உத்தரவை மீறி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்: கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடத்த அரசு தடை விதித்தது. தடையை மீறி பல ஊர்களில் திமுகவினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கொரட்டூர் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மத்திய அரசு அறிவித்த வேளாண் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நாம் கேட்டுக்கொண்டோம். இதனால் தமிழக அரசையோ மத்திய அரசையோ கண்டித்து தீர்மானம் இருக்கக்கூடாது ஆட்சிக்கு எதிராக தீர்மானம் இருக்கக்கூடாது அரசியல் பேசக்கூடாது என ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.
கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட திமுகவை கண்டு எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார் என்றும் தெரிவித்தார். ஊர் ஊராக செல்லும் எடப்பாடி பழனிச்சாமி எதனடிப்படையில் செல்கிறார் ஷோ செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக நடத்திய செயற்குழு கூட்டத்தில் 100கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அங்கு கொரோனா பரவாதா? என்றும் அது கபட நாடகம் என்றும் பேசினார்.
ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளை அடிமையாக்குகிறது,நெல்லுக்கு உரிய விலை இல்லை, விற்பனை கூடம் மூடல், உழவர் சந்தை மூடல்,விலைவாசி உயர்வு என அதிமுக ஆட்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்தியா முழுவதும் விவசாயிகள் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன என்றும், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகா, கூட்டணி கட்சி ஆட்சி பஞ்சாப், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் திரும்பபெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தார். அரசின் உத்தரவை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டதால் காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
-
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications