அதிகாலையில் பயங்கரம்.. திருவள்ளூரில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
திருவள்ளூர்: சென்னை சோழவரத்தில் போலீசார் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடிகளை அதிகாலையில் போலீசார் எண்கவுண்டர் செய்தனர். இதில் மூன்று போலீசாரும் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்.. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூராக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான முத்து சரவணன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் சென்னை சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கே விரைந்த போலீசார் ரவுடி முத்து சரவணனைக் கைது செய்ய முயன்றனர். இருப்பினும், அவர் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
போலீசாரை தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரவுடி முத்து சரவணன் உயிரிழந்துள்ளார். அப்போது அங்கே இருந்த மற்றொரு ரவுடி சதீஷ் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலையில், அவர் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 போலீசாரும் காயமடைந்தனர். போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணன் மீது நெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி முத்து சரவணன் உடல் இப்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications