Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களின் கல்வி கட்டணம்.. "வேலையை" காட்டிய ஜோடி.. அந்த பெண் காமினி எங்கே? திருவள்ளூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்டணத்தில் போலி ரசீதுகள் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த கல்லூரி ஊழியர் கைதாகி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் சதர்ன் அகாடமி மற்றும் மாரிடைம் ஸ்டடிஸ் என்ற பெயரில் கடல்சார் கல்லூரி இயங்கி வருகிறது. இது கப்பல் சார்ந்த படிப்புக்களுக்கான கல்லூரியாகும்.. இங்கு ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.

Student Admission Fee and Tiruvallur District Private college employee arrested for rs35 lakh students tuition

இந்த கல்லூரியின் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் ஆர். கே. சாலையில் செயல்பட்டு வருகிறது.. இந்த அலுவலகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக அசோகன் பணியாற்றி வருகின்றார். இங்கு, கணக்காளராக காமினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 28 வயதாகிறது. இவர்களை தவிர, விளம்பர அதிகாரியாக வெங்கடேசன் (42) என்பவரும் பணியாற்றுகிறார்.

அசோகன்: இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிர்வாக அதிகாரி அசோகன், கல்லூரியின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தார்.. அப்போது, கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் அளவுக்கு பணம் கையாடல் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்..

பின்னர் அசோகன் இது குறித்து விசாரணையும் நடத்தினார்.. அப்போதுதான், அந்த அலுவலகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் மற்றும் கணக்காளர் காமினி ஆகிய 2 பேருமே கூட்டாக சேர்ந்து கல்லூரி மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தில் சுமார் 35 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது உறுதியானது.. இத்தனை நாளும் போலி கணக்குகளை இவர்கள் காட்டிவந்ததும் தெரியவந்தது.

போலீசில் புகார்: உடனே அசோகன் ராயப்பேட்டை போலீசாரிடம் சென்று புகார் தந்ததுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் போலீசில் ஒப்படைத்தார்..

இதையடுத்து போலீசார் இருவர் பேர் மீதும் ஐபிசி 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த பெண் கணக்காளர் உள்பட 2 பேருமே தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்..

காமினி: இறுதியில், திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் 5வது தெருவை சேர்ந்த வெங்கடேசனை, இரவு நேரத்தில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. ஆனால், அதற்குள் காமினி எஸ்கேப் ஆகிவிட்டார்.. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. கல்வி கட்டணமாக செலுத்தப்பட்ட பணத்தை, கல்லூரி ஊழியர்களே "வாரிசுருட்டிய" இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+