Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை துரோகம்".. பல ஆண் நண்பர்கள்.. ரத்த அரிவாளுடன்.. ராத்திரி ரோட்டில் போனாராமே.. ஓ ப்ரியா ப்ரியா

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: 25 வயதுதான் ஆகிறது பிரியாவுக்கு.. இந்த வயதில் இவ்வளவு வன்மமா? இவ்வளவு குரூரமா? என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளது திருவள்ளூர் மாவட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்... இவர் ஒரு கட்டிட மேஸ்திரி... இவரது மனைவி பெயர் பிரியா.. 25 வயதாகிறது.. இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் என்பவருடன் பிரியாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

Tiruvallur Priya and Do you know what did Young woman confessed to the Ponneri Police

கள்ளக்காதல்: கோபாலகிருஷ்ணனுக்கு 24 வயதாகிறது.. ஒரு தனியார் கொரியர் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். 2 வருடமாக இவர்களின் கள்ளக்காதல் வளர்ந்துள்ளது.. பலமுறை தகாத உறவிலும் இருந்துவந்துள்ளனர்.. இந்நிலையில், வேலை விஷயமாக, கோபாலகிருஷ்ணன் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல நேர்ந்துள்ளது.. இதனால், முன்பு போல, பிரியாவை அடிக்கடி சந்திக்க முடியவில்லை..

இதனால், பிரியா, இன்னொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார்.. சென்னை சேத்துப்பெட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் பிரியாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது..

ஆவேசம்: ஒருகட்டத்தில் இந்த விஷயம், கோபாலகிருஷ்ணனுக்கு தெரியவந்ததுமே, பிரியாவை போனில் அழைத்து கண்டித்துள்ளார்.. கள்ளக்காதலை கைவிடும்படி சத்தம் போட்டுள்ளார்.. ஆனால், பிரியா அதை காதில் வாங்காமல், ஆனந்தனுடன் உறவை வளர்த்து வந்துள்ளார். இதனால் மனம் நொந்து போன கோபாலகிருஷ்ணன், பிரியாவுக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்து வந்துள்ளார்.. இதில் எரிச்சலடைந்த பிரியா, ரவுடி ஆனந்திடம் சென்று, கோபாலகிருஷ்ணனை கொலை செய்யும்படி கூறியிருக்கிறார்.

இதையடுத்து, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 4 கூலிப்படையினரிடம் பேரம் பேசப்பட்டது.. நேற்றிரவு திடீரென கோபாலகிருஷ்ணனுக்கு போனை போட்டு, புளியந்தோப்புக்கு வருமாறு அழைத்திருக்கிறார் பிரியா.

ஆசைவார்த்தைகளை சொல்லி பிரியா அழைக்கவும, கோபாலகிருஷ்ணனும் வந்துள்ளார்.. அப்போது, கூலிப்படையினர் 4 பேரும், கோபாலகிருஷ்ணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளனர்..

ஆவேச பிரியா: இந்த 4 பேருடன் சேர்ந்து, பிரியாவும் அரிவாளால் கோபாலகிருஷ்ணனை வெட்டியிருக்கிறார். பிறகு 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.. தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட பிரியாவை விடிய விடிய தேடினார்கள்.. இறுதியில், இன்று அதிகாலை சிக்கிவிட்டார் பிரியா.. கூலிப்படையினர் 4 பேரையும் தேடும்படலம் நடக்கிறது.

அதாவது, அரிவாளால், கோபாலகிருஷ்ணனை வெட்டி கொன்றபோது, பக்கத்திலேயே நின்ற பிரியா அதனை ரசித்து பார்த்து சிரித்து கொண்டே நின்றாராம். கோபாலகிருஷ்ணன் வலி தாங்க முடியாமல் அலறவும், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் அனைவரும் அங்கிருந்து பைக்கில் தப்பி உள்ளனர்..

மாஸ்டர் பிளான்: கிளம்பி செல்லும்போது, பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு, தப்பி சென்றார்கள். அரிவாள்களுடன் ரோட்டில் தனியாக நின்ற பிரியா, அந்த வழியே வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு புழல் பகுதியில் இறங்கி கொள்வதாக சொல்லி உள்ளார்.

ஆனால், புழல் அருகே கார் சென்றதும், வழக்கமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. பிரியா வந்த காரையும் மடக்கி சோதனை செய்தபோதுதான், அரிவாள்களும், அதிலிருந்த ரத்தக்கறைகளும் பிரியாவை காட்டி கொடுத்துவிட்டன. பிரியாவிடமிருந்து, ரத்த கறை படிந்த 4 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கணவர்: இந்த பிரியாவுக்கு கல்யாணமாகி 10 வருஷமாகிறதாம். அதாவது 15 வயதிலேயே ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறார்.. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால், பிரியாவின் கள்ளத்தொடர்புகள் அதிகமாகி கொண்டே போனதால், கணவர் லட்சுமணன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டாராம்.. எப்போதாவது வந்து, தன்னுடைய 2 பிள்ளைகளை மட்டும் பார்த்து செல்வாராம்.

கணவர் வீட்டை விட்டு போய்விட்டது, பிரியாவுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. அதனால், பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்.. இதில், கோபாலகிருஷ்ணன் மட்டும், பிரியாவை அளவுக்கு அதிகமாக நேசித்துள்ளார். ஆனாலும், கள்ளக்காதலி யார் என்பதில், கடும் போட்டி ஏற்பட்டு, கடைசியில் கொலை வரை வந்துவிட்டது.

பச்சை துரோகம்: கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து, கள்ளக்காதலனையும் ஏமாற்றி, 2 குழந்தைகளையும் யோசித்து பார்க்காமல், ஒரு உயிரையே காவு கொண்டுவிட்டது தலைக்கேறிய காமம்.. அனைத்து குற்ற செயல்களுக்கும் ஒரு பெண் மட்டுமே மூலகாரணமாக இருந்திருக்கிறார் என்பதைதான் ஜீரணிக்கவே முடியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+