தலைப்பாகை கட்டி.. வேட்டியை மடிச்சுக் கட்டி... மண்வெட்டியைத் தூக்கி.. அசத்திய முதல்வர் பழனிச்சாமி!
திருவள்ளூர்: பாருங்க நம்ம முதல்வர் பழனிச்சாமியை.. வேட்டியை மடித்துக்கட்டி, தலைக்கு உருமாக்கட்டி, மண்வெட்டியை தூக்கி குளத்தை தூர் வரும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று குடிமராமத்து பணிகள் 2019-20ன் கீழ், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில், திருவள்ளூர், 43 பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது பூமி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமி கடப்பாரையால் குத்தினார். பின்னர் வேஷ்டியை மடித்துக்கட்டிய முதல்வர் துண்டை தலையில் தலைப்பாகை போல் கட்டி முழு விவசாயி போல மாறி மண்வெட்டி எடுத்தார். அப்படியே கடப்பாரை குத்திய இடத்தில் மண்ணை அள்ளி தட்டில் போட்டார். இதை பார்த்து சுற்றி இருந்த அமைச்சர்கள் வேலுமணி, மாஃபா பாண்டியராஜன் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பின்னர் அந்த மண் நிறைந்த தட்டை எடுத்து விவசாய பணிக்கு வந்த பெண் ஒருவரிடம் அளித்தார்.
மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, குடிமராமத்து பணிகள் 2019-20ன் கீழ், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் தொடக்க விழாவில், திருவள்ளூர், 43 பனப்பாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார். #TNGovt #SaveWater pic.twitter.com/crm0OMIM32
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 7, 2019
பின்னர் விவசாய குழுக்களுக்கான குறை தீர்ப்பு செயலி மற்றும் குடிமராமத்து பணிகள் -விவசாய பெருமக்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவற்றை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டட்ம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதல்வர் பழனிச்சாமி, பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம் என்றும் பருவமழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை மேம்படுத்தி அதிகளவு நீர் சேமிக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி காவிரியின் குறுக்கே யாரும் எந்த அணையும் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார். பருவமழை பெய்தால்தான் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றும் அப்போது கூறினார். விண்ணில் இருந்து விழும் ஒவ்வொரு மழை நீரையும் நாம் சேமிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications