திருவண்ணாமலையில் 50 சென்ட் நிலம்.. பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்களால் வந்த வில்லங்கம்.. அதுக்கு?
திருவண்ணாமலை: முறையாக சொத்துக்களை பகிர்ந்தளிக்கப்படாவிட்டால், அது சிலசமயம் உயிரையே காவு வாங்கும் அளவுக்கு கொண்டுசென்றுவிடுகிறது. அப்படித்தான் திருவண்ணாமலையில் ஒரு சோகம் நடந்துள்ளது.. அண்ணன் - தம்பி இருவருமே இல்லாமல் இன்று இருவரின் குடும்பமும் தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ளது தென்முடியனூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பாலு. இவருக்கு வாசு, புருஷோத்தமன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். வாசுவுக்கு 55 வயதாகிறது.. புருஷோத்தமனுக்கு 53 வயதாகிறது.

பாலுவுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் இருந்தது.. தந்தை பாலு இறந்துவிட்டதால், மகன்கள் இருவரும், இந்த நிலத்தை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, அதில் விவசாயம் செய்து வந்தனர்.
50 சென்ட் நிலம்: இதுதவிர பாலுவின் பெயரில் 50 சென்ட் நிலம் உள்ளதாக தெரிகிறது.. அந்த நிலத்தை பிரித்து கொடுக்காமல், அண்ணன் வாசு மட்டும் பயிர் செய்து வந்ததாக சொல்கிறார்கள். எனவே, இதுகுறித்து புருஷோத்தமன் கேட்டுள்ளார்.. 50 சென்ட் நிலத்திலிருந்து தன்னுடைய பாகத்தை தர வேண்டும் என்றும், அந்த நிலத்தை பிரித்து கொடுக்கும்படியும் கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று, வாசு தன்னுடைய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புருஷோத்தமன், நிலத்தை எனக்கு பிரித்து தராமல் நீயே அனுபவிக்கிறாயா? உடனே பிரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால், அண்ணன் - தம்பிக்கு இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் கைகலப்பு வரை சென்றுள்ளது..
உச்சக்கட்ட ஆவேசம்: இதில், ஆத்திரம் அடைந்த வாசு, கீழே கிடந்த மண் வெட்டியை எடுத்துவந்து, புருஷோத்தமனின் தலையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் தலையில் ஆழமாக வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தில் புருஷோத்தமன் அங்கேயே மண்ணில் சரிந்து விழுந்தார்..
புருஷோத்தமனின் அலறல் சத்தத்தை கேட்டு, நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்கள், பதறியடித்து கொண்டு ஓடிவந்தனர்.. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், டாக்டர்கள் புருஷோத்தமனை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதிர்ச்சி: இதுகுறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுவை கைது செய்தனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் தி.மலை மாவட்டத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications