பல்லை கழற்றிவிடுவேன்! போயா வெளியே.. உளுந்து விதைக்கு ரசீது கேட்ட விவசாயியை விரட்டிய வேளாண் அதிகாரி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உளுந்து விதைக்கு ரசீது கேட்கச் சென்ற விவசாயி பிரகாஷ் என்பவரை அங்கிருந்த வேளாண் அதிகாரி ''பல்லை கழட்டிபுடுவேன்.. வெளியே போயா'' என விரட்டிய நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வந்தவாசி வேளாண் அலுவலகத்தில் உளுந்து விதை வாங்கி சாகுபடி செய்திருக்கிறார். இதனிடையே தாம் வாங்கிய உளுந்து விதைக்கான ரசீதை கேட்டு ஒரு முறை இரு முறை அல்ல பல முறை அந்த வேளாண் அலுவலகத்துக்கு அலையாய் அலைந்து திரிந்திருக்கிறார். இதனிடையே வேளாண் அதிகாரி கோவிந்தராஜனிடம் 4 மாதமாக கேட்கிறேன் எனக் கூறி வேளாண் அலுவலகத்தில் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார் விவசாயி பிரகாஷ்.

இதனை ஊழியர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட கவுரவ குறைச்சலாக எடுத்துக்கொண்ட வேளாண் அதிகாரி கோவிந்தராஜன், ''யோவ், என்ன வாயா போயான்னு பேசுற, பல்லை கழட்டிபுடுவேன்.. வெளியே போயா.. '' எனக் கத்தி நாக்கை துருத்தி மிரட்டி விவசாயி பிரகாஷை விரட்டியடிப்பதில் குறியாக இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த வேளாண் துறை அலுவலர்கள் விவசாயி பிரகாஷை சமாதானம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர்.
இதனிடையே வேளாண் அதிகாரி கோவிந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி பிரகாஷ் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், நடந்த நிகழ்வு குறித்து தனி விளக்கம் கொடுப்பதாக கூறியிருக்கிறார் வேளாண் அதிகாரி. வேளாண்துறை அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் எல்லோரும் படித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. சற்று முன்னபின்ன அவர்கள் ஆதங்கத்தை கொடித்தீர்த்தால் அதனை காது கொடுத்துக் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டியது தான் அதிகாரிகள் கடமை.
வந்தவாசி மட்டுமில்லை தமிழகத்தின் பல வேளாண் அலுவலகங்களில் இது போன்ற சலசலப்புகள் அவ்வப்போது ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications