நீங்க உத்தரவு போட கூடாது.. அருந்ததி சமூக பெண் ஊராட்சி தலைவர் விரட்டியடிப்பு! திருவண்ணாமலையில் கொடுமை
திருவண்ணாமலை: ஆரணி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தன்னை பேச விடாமல் விரட்டியடித்ததாக அருந்ததி சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் சமரசம் காண முயற்சித்து வருகின்றனர்.

குறுக்கீடு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிரமத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அருந்ததி சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் இவரை சிலர் பேச விடாமல் அடிக்கடி தடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், இவர் பேச தொடங்கிய போது சிலர் குறுக்கீடு செய்துள்ளனர்.

குடிபோதை
இதை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேசி வந்த நிலையில், குடிபோதையில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் எத்தனை முறை எச்சரித்தாலும் அவர்கள் தங்கள் ரகளைகளை நிறுத்தவேயில்லை. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் தலைவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என குடிபோதையில் இருந்தவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

பணி செய்யவிடாமல் சதி
தங்கள் ஊரில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பேசி தீர்வு காண முடியும் என நம்பிக்கையுடன் வந்த ஊர் மக்களுக்கு இந்த வாக்குவாதம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இனி வரும் கூட்டங்களிலாவது மக்கள் பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தன்னை செயல்பட விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதாக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரம்
இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் ஊராட்சிமன்ற தலைவர்களாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படும் போது அவர்களின் கணவர்கள்தான் தலைவர் போல செயல்படுவார்கள். விதிவிலக்காகத்தான் பெண்கள் தலைவராக பணியாற்றுவார்கள். இவ்வாறு இருக்கையில் சுயமாக பணியாற்ற முன்வந்த பெண் தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பது என்பது சரியானது அல்ல என சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications