ஆரணியை அதிரவைத்த தேவிகலா.. நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியார்.. கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை, மருமகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையான 20 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனைப் சான்றிதழிலால் மருமகள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன், கோவிந்தம்மாள் தம்பதியின் மகன் சிராலன் (35). இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி, ராஜேஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர். ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினர் தங்களது மகள்களான ராஜேஸ்வரியை அதே கிராமத்திலும், ராஜலட்சுமியை வேலூரிலும் கட்டிக் கொடுத்துள்ளனர்.

மகன் சிராலன் ராணுவத்தில் பணியாற்றஇ வந்துள்ளார். இந்நிலையில், சிராலனுக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேவிகலா (24) என்பவருடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு ஹரிணி (வயது 4) என்ற மகளும், ஹரிகரன் என்ற மகனும் (வயது 1) உள்ளனர். ராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். சிராலன் ராணுவத்தில் பணிபுரிவதால் கோவிந்தம்மாள் தனது மருமகள் தேவிகலாவுடன் வசித்து வந்துள்ளார்.
கோவிந்தம்மாளின் மகள்களாந ராஜேஸ்வரி மற்றும் ராஜலட்சுமி இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தேவிகலாவிற்கு மட்டும் எப்படி இரண்டு குழந்தைகள் பிறந்தது என்று கூறி அடிக்கடி கோவிந்தம்மாளுக்கும், மருமகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் இப்பிரச்னை முற்றியதையடுத்து இரு தரப்பினரும் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மாமியார் கோவிந்தம்மாள், தேவிகலாவிடம் 2 குழந்தைகள் எப்படி பிறந்துள்ளன என்று கூறி அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், அவர்கள் இருவருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இருவரும் மாறி மாறி கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஆத்திரமடைந்த தேவிகலா மாமியார் கோவிந்தம்மாளின் (வயது 55) கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதில், கோவிந்தம்மாள் மயக்கமடைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தேவிகலா உடனடியாக அருகில் இருந்த கோவிந்தம்மாளின் மகள் ராஜேஸ்வரியை அழைத்து தரையில் தடுக்கி விழுந்து தனது மாமியார் மயக்கமடைந்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தேவிகலா மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கோவிந்தம்மாளை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு, கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இந்நிலையில், அவரது இறப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் காவல் துறையில் தனியார் மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிந்தம்மாளுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்குப் பின்னர் கோவிந்தம்மாள் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக சான்றிதழில் தகவல் வெறியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை புகாரின் பேரில், கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மருமகள் தேவிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேவிகலா நடந்த சம்பவங்களைக் கூறியதுடன், கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
காவல் துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போளுர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தேவிகலாவை ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே தகராறில் ஈடுபட்டு வந்த மாமியாரை மருமகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications