இப்படிப் போகாதீங்கம்மா, முந்தானையால் இழுத்து மூடிவிட்ட பெண் போலீஸ்.. குவியும் பாராட்டு!
பெண்களுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்திய பெண் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு குவிகிறது.
Recommended Video

திருவண்ணாமலை: தீபத்துக்கு கோயிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பெண் போலீஸ் மங்கையர்க்கரசியை நன்றியுடன் பார்த்து கொண்டே நகர்ந்து சென்றார்கள்!
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை தலத்தில், கார்த்திகை மகா தீப திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் அரோஹரா பக்தி முழக்கத்துடன் தீப தரிசனத்தை செய்தார்கள்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த விழா என்றாலே திருவண்ணாமலையில் விசேஷம்தான். இதற்காக உள்ளூர், வெளியூர், வெளிநாடு என உலகின் பல பக்கங்களிலிருந்து கூட்டம் குவிவார்கள்.

பாதுகாப்பு
இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதும் வழக்கம்தான். ஆனால் மாவட்ட மகளிர் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி மேலே போய்விட்டார். அவர் கை நிறைய சேஃப்டி பின்களை வைத்திருந்தார்.

முந்தானை
இந்த கூட்டத்திலும் நகைகளை அபேஸ் செய்யவும் மர்மபேர்வழிகள் நடமாடவே செய்வார்கள். அதனால் கோயிலுக்குள் நுழையும் பெண்களை அழைத்த மங்கையர்க்கரசி, அப்பெண்களின் முந்தானையாலேயே இழுத்து போர்த்தி மூடிவிட்டார்.

மலர்ந்த முகம்
மூடிவிட்ட கையோடு தான் வைத்திருந்த சேஃப்டி பின்களால் நகைகள் வெளியே தெரியாதவாறு குத்திவிட்டார். கூடவே அந்த பெண்களுக்கு நகைகள், உடைமைகள் பத்திரம் என்று மலர்ந்த முகத்துடனே சொல்லி அனுப்பி வைத்தார்.

பாராட்டுக்கள்
இதனை கண்ட பெண்கள் நன்றி கலந்த சிரிப்பை உதிர்த்து அங்கிருந்து கோயிலுக்குள் நகர தொடங்கினார்கள். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நிறைய பேர் பெண் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
{document1}












Click it and Unblock the Notifications