பாம்பு படுக்கை..மகாவிஷ்ணு வேஷம்..பக்கத்துல 2 பெண்கள்..போலி சாமியாரை தட்டி தூக்கிய செஞ்சி போலீஸ்
திருவண்ணாமலை: போலி சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நானே கடவுள் என்று கூறி மகாவிஷ்ணு போல வேஷம் போட்டு பாம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரர் மாதிரி ஏமாற்றி கால் அமுக்கி விடச்சொல்லி அட்டகாசம் செய்து மக்களை ஏமாற்றிய போலி சாமியாரை செஞ்சி நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலி சாமியார்கள் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர். எத்தனையோ சாமியார்கள் சித்து வேலை செய்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றி பண மோசடி செய்து கடைசியில் காவல்துறையிடம் சிக்கிக்கொள்வார்கள். சிலரோ குறி சொல்வது போல ஏமாற்றி செய்வினை, பில்லி சூனியம் எடுக்கிறேன் என்று பணம் கறந்து விடுவார்கள். சிலரோ பெண் பிள்ளைகளை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்வார்கள். ஏமாந்தவர்கள் பலர் காவல்நிலையம் வரை செல்வதில்லை. சிலர்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்து கம்பி எண்ண வைப்பார்கள்.

நானே கடவுள் என்று சொல்லி மகாவிஷ்ணு வேஷம் போட்டு மக்களை ஏமாற்றிய நபரை கைது செய்துள்ளனர் செஞ்சி காவல்நிலைய காவல்துறையினர். சந்தோஷ்குமார் என்ற அந்த நபர், தான் பூமியில் மனித உருவத்தில் அவதரித்தவர் என்று சொன்னதோடு தனது இரண்டு மனைவியரை ஸ்ரீதேவி, பூதேவி என்று கூறியுள்ளார்.
பாம்பு படுக்கையில் படுத்து இரண்டு மனைவியரையும் கால் அமுக்கி விடுவது போல போஸ் கொடுக்க வைத்துபோட்டோ சூட் நடத்தியுள்ளார் அந்த நபர். நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும் கூறி நாடகமாடி பணம் பறித்துள்ளார் சந்தோஷ் குமார்.
இவரிடம் ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் செஞ்சி சந்தோஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாற்கடலில் பாம்பு படுக்கையில் படுத்து போஸ் கொடுத்த சந்தோஷ்குமார் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications