Accident: திருவண்ணாமலையில் காரை ஓட்டிய போது கண் அசந்த மோனீஷ்குமார்! பெண் உள்பட இருவர் பலி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தனது நண்பர்களுடன் கிரிவலம் முடித்து வீடு திரும்பும் போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கார் புளிய மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஒரு இளைஞர் உள்பட இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூர் பத்மா நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்(26), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த மோனீஷ்குமார்(24), சஞ்சய்குமார்(23), மதுமிதா(28), குணலட்சுமி(24), காயத்ரி(24) ஆகிய 5 நபர்களுடன் நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு காரில் வந்துள்ளனர்.

காரை மோனீஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு கிரிவலம் முடித்துவிட்டு அதிகாலை சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த கொண்டம் பகுதி அருகே சென்ற போது கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது.
மேலும் சாலையோரம் இடது பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கார் ஓட்டுநர் மோனீஷ்குமார் காரிலேயே சிக்கிக் கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசபாக்கம் காவல் துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் கட்டர் மெஷின் உதவியுடன் சீட்டின் அடிபாகத்தை கட்டு செய்தனர். பின்னர் பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மோனீஷ் குமாரை மீட்டுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த சஞ்சய்குமார், மதுமிதா, குணலட்சுமி, காயத்ரி ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுமிதா(28) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் 4 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலசப்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நடந்த விபத்தில் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. அப்படியே தவிர்க்க முடியாத சூழலில் எங்காவது சென்றாலும் தூக்கம் வந்தால் எங்காவது ஒரு இடத்தில் வண்டியை போட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications