தி.மலை, விழுப்புரம் மக்களே உஷார்! சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு.. வெள்ள அபாயம்
திருவண்ணாமலை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இரு மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

- சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு - 119 அடி
- தற்போதைய நீர் மட்டம் - 113.40 அடி
- திறந்துவிடப்படும் நீரின் அளவு - 9,000 கனஅடி
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகி இருக்கிறது. இந்த பகுதியில் 16.48 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ, கரூர் மாவட்டம் எசனூர் பகுதியில் 15.4 செ.மீ, கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் 15 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகியிருக்கிறது. வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை என டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இன்று டெல்டாவில் மழை இல்லை. மாறாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்திருக்கிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுகு்க விடுமுறையும் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து, கனமழை காரணமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தேனியில் சில வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது. சேலம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications