அதிமுக விழாவா?.. அம்மன் விழாவா?... அங்காள பரமேஸ்வரியே பாடலை கேட்டு சாமி ஆடிய பெண்கள்..
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிமுகவின் 47-ஆவது தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் அம்மன் பாடலுக்கு பெண்கள் சாமிஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜமுனாமரத்தூர் பகுதியில் எம்எல்ஏ பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவின் 47-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அதிமுக பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேசுகையில் திருவண்ணாமலை ஆன்மீக பூமி. நானும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ளதால் செல்வராஜ் பக்தி பாடலை பாடி பேச்சை தொடங்குங்கள் என்றார்.
இதை ஏற்ற விழுப்புரம் செல்வராஜ், அங்காள பரமேஸ்வரியே என அம்மன் பக்தி பாடலை பாடினார். அப்போது கூட்டத்திலிருந்த பெண்கள் அவர் பாடிய பாடலை கேட்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
இன்னும் சில பெண்களோ அங்கு எழுந்து நின்று சாமியாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விழாவுக்கு வந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பன்னீர் செல்வம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications