Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களமிறங்கிய அன்புமணி..செய்யாறு சிப்காட் பணிக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்.. குலுங்கிய திருவண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் அரசு நிலம், விவசாயிகள் நிலம் அடங்கும். அரசு நிலத்தை விட விவசாயிகள் நிலம் தான் அதிகம் என்பாதல் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Today PMK will protest against Thiruvannamalai Cheyyar Sipcot headed by Anbumani Ramadoss

ஆனால் தொடர்ந்து பணி நடந்தது. இதனால் விவசாயிகள் 120 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை நடத்திய 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதோடு இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டம் பாயாத 19 நபர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணியில் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் நிலம் பறிப்பதை கைவிடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மேல்மா கூட்டு சாலைக்கு இன்று அன்புமணி ராமதாஸ் வந்தார். இதையடுத்து அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

Today PMK will protest against Thiruvannamalai Cheyyar Sipcot headed by Anbumani Ramadoss

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதோடு சிப்காட் விரிவாக்க பணியை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு பாமக தலைவரான நான் தலைமை ஏற்கிறேன். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு இயக்கங்களின் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+