Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக இந்து விரோத கட்சி.. அக்னிபாத்தை யாரு அதிகமா எதிர்க்கிறாங்க பாருங்க! - திருமாவளவன் லாஜிக்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அக்னிபாத் திட்டத்தை அதிகம் எதிர்ப்பு இந்துக்கள்தான் என்றும், பாஜக இந்துவிரோத கட்சி எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருக்கிறார்.

Recommended Video

    அக்னிபாத்தை யாரு அதிகமா எதிர்க்கிறாங்க பாருங்க! - திருமாவளவன் லாஜிக்

    திருவாரூர் மாவட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பணிகளை மேற்கொண்டார்.

    இந்து விரோத கட்சி பாஜக

    இந்து விரோத கட்சி பாஜக

    பல ஊர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அக்னிபாத் திட்டத்தை இந்துக்களே அதிகளவில் எதிர்கின்றனர். பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அக்னிபாத் திட்ட செயல்படுத்துவதின் மூலமும், அதனால் ஏற்படுள்ள வன்முறைகள் மூலம் தெரிகிறது.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    சாதிய வன்கொடுமை மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும் கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டும். அதிமுக உட்கட்சி பூசலில் கருத்து தெரிவிக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு விருப்பமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எந்தவித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார்.

    மக்களே எதிர்க்கட்சி

    மக்களே எதிர்க்கட்சி

    காவல் நிலைய வதை கொலைகள் குறித்து விசாரிப்பதற்கும் தனி நீதிபதி கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும். மோடி தங்கள் கட்சிக்கு சரியான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து கொண்டு அவர் பேசுகிறார். பாஜகவுக்கு சரியான எதிர்க்கட்சி மக்கள்தான். விரைவில் மக்கள் சரியான பாடத்தை பாஜகவுக்கு புகட்டுவார்கள்." என்றார்.

    சுவாரஸ்ய நிகழ்வு

    சுவாரஸ்ய நிகழ்வு

    இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, திருமாவளவனின் கேமராமேன் தமிழ் இமயன் வைத்திருந்த கேமராவை வாங்கி "என்னை நீ புகைப்படம் எடுக்கிறாய், உன்னை நான் புகைப்படம் எடுக்கிறேன்." என்று கூறி தொண்டர்கள் தனக்கு அணிவித்த மலர் கிரீடத்தை புகைப்படக் கலைஞர் தமிழ் இமயனுக்கு அணிவித்து புகைப்படம் எடுத்து மகிழ்வித்தார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+