மதக்கலவரம் செய்வோம்.. மசூதிகளை இடிப்போம்.. ஆடியோ லீக் -பாஜக நிர்வாகி மீது வழக்கு
திருவாரூர்: மதக்கலவரம் செய்ய வேண்டும் என்றும், சைலண்டாக அடிக்க வேண்டும் எனவும் மன்னார்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் செந்தில் ராஜ்குமார் லட்சுமணன். பாஜகவின் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக இருக்கும் இவர், மதக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் பேசிய செந்தில் ராஜ்குமார் லட்சுமணன்," பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நமக்கு உதவியாக உள்ளார். வழக்கறிஞர்களுடன் நமக்கு உதவியாக இருக்கிறார்.
இட ஒதுக்கீடு மூலம் கல்வி அறிவை பெற்றவர் அண்ணாமலை.. கலைஞரை பற்றி பேச வேண்டாம் -செஞ்சி மஸ்தான் அறிவுரை
அடிக்க வேண்டும்
நாம் உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் இல்லை. கட்சி மேடைகளில் இந்து முன்னணி போன்று பேசக்கூடாது. திமுகவுக்கும் நமக்கு வேறுபாடு உள்ளது. நாம் அரசியல் கட்சியை போன்று பேச வேண்டும். முஸ்லீம்களை அடிக்க வேண்டும் என்றால் அடிக்க வேண்டும். ஆனால் சைலன்டா அடிக்க வேண்டும். வைலெண்டா அடிக்க கூடாது.
மத கலவரம் செய்வோம்
உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை கட்சி மேடையில் திட்டினால் என்றால் என்ன நடக்கும்? நம்ம மக்களே பின்னால் போய்விடுவார்கள். அதிகாரத்தில் உட்கார்ந்து அவர்களை வளர விடாமல் அடிக்க வேண்டும். அதற்கான அடித்தள் இருக்கால் மத கலவரம் செய்ய வேண்டும். மதத்தை அப்புறப்படுத்திட்டு அதிகாரத்திற்கு வரும் வரை உள்ளே வைத்தே தாக்க வேண்டும்.
மசூதிகளை இடிக்க வேண்டும்
நபியை திட்டுவதால் அவர்கள் அடங்கி விட்டார்களா?. ஒட்டுமொத்த பள்ளிவாசல்களையும் இடித்து தள்ள வேண்டும். அதற்கு நாம் அதிகாரத்திற்கு வர வேண்டும். அத விட்டுட்டு அவசரப்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. நானும் சில நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடுகிறேன்." என்று கூறுகிறார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் வழக்குப்பதிவு
இது தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கடந்த 7 ஆம் தேதி புகாரளித்தது. அதன் அடிப்படையில், பாஜக நிர்வாகி செந்தில் ராஜ்குமார் லட்சுமணன் மீது 5 பிரிவுகளின் கீழ் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.