பேனர் பஞ்சாயத்து.. தட்டிக் கேட்ட இளைஞரைத் தாக்கிய திமுக கவுன்சிலர்.. திருவாரூரில் நடந்த கொடூரம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே இளைஞர் ஒருவரை வீடு புகுந்து திமுக கவுன்சிலர் தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது வீட்டின் முன்பாக பேனர் வைக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்ட இளைஞரை திமுக கவுன்சிலர் மற்றும் அவரின் ஆட்கள் தாக்கியதோடு, வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இவரின் சித்தி மகாலட்சுமி என்பவர், அந்த பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. சித்திக்கு உதவியாக கிஷோரும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பாக திமுகவினர் பேனர் வைத்ததாக தெரிகிறது.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமனின் ஆதரவாளர்கள் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதனைப் பார்த்த கிஷோர், உடனடியாக பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக புருஷோத்தமனின் ஆட்கள் மற்றும் கிஷோர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திமுக கவுன்சிலர் புருஷோத்தமனுக்கு தெரிய வர, உடனடியாக தனது ஆதரவாளர்கள் 12 பேருடன் சேர்ந்து கிஷோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். நேராக வீட்டிற்குள் புகுந்த அனைவரும் கிஷோரை சரமாரியாக தாக்கியதோடு, சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். வீட்டின் மாடியில் கிஷோரை கவுன்சிலரின் ஆட்கள் தாக்கும் வீடியோ வெளியாகியது.
Goondagiri of DMK in full public display. DMK Tiruvarur ward councillor Purushothaman and his gang attacked a person for objecting to the placement of a banner in front of his residence.
— K.Annamalai (@annamalai_k) August 26, 2025
From Ministers to Councillors, goondaism is DMK’s political culture. Your party that… pic.twitter.com/AbE4r8LC4v
இந்த விவகாரம் தொடர்பாக கிஷோர் நேரடியாக திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், புருஷோத்தமன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கிஷோர் மீது புருஷோத்தமனும் புகார் அளித்தார். இதனால் இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தின் வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுகவில் அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை, அராஜக அரசியலையே ஒரு கலாச்சாரமாக வைத்துள்ளனர். கொடூரமான வன்முறையில் ஈடுபட்ட பின், வெறுமன மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications