2-வது மனைவியின் மகளை சீரழித்த "சின்னப்பா".. தூக்கி உள்ளே வைத்த திருவாரூர் போலீஸ்!
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
திருவாரூர்: 17 வயது சிறுமியை நாசம் செய்த, தாயின் 2-வது கணவரை போலீசார் தூக்கி ஜெயிலில் வைத்தனர்
திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா. இவருக்கு 35 வயதாகிறது. கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர்.. எனினும் சித்ரா என்பவரை 2-வதாக கல்யாணம் செய்து கொண்டார்.
சித்ராவுக்கும் இது 2-வது கல்யாணம். ஏற்கனவே கணவனை பிரிந்த சித்ராவுக்கு ஒரு பெண் 17 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். இப்போது, சின்னப்பாவிற்கும் சித்ராவிற்கும் இன்னொரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சித்ராவின் மகளுக்கு சின்னப்பா, நிறைய பாலியல் தொல்லைகளை தந்துவந்துள்ளதாக தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சின்னப்பா செய்யும் கொடூரம் கண்டு சிறுமி பயந்து நடுங்கினாள். தாயிடமும் சொல்ல துணிவில்லாமல் தவித்து வந்தாள்.
நேற்று சின்னப்பா, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரமே செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி, எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிறுமி மயங்கி விழுந்துகிடப்பதை கண்டு, பதறியடித்து கொண்டு அவளை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டாள்.
இந்த சம்பவத்தில் இருந்து மீள முடியாத சிறுமி, நேராக திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்று சின்னப்பா மீது புகார் அளித்துவிட்டார். இதையடுத்து, சின்னப்பாவை போலீசார் கைது செய்து, திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர், திருச்சி ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications