ஆவடி இல்லத்தில் நாசர்! ஆதங்கத்துடன் குவியும் ஆதரவாளர்கள்! யாரும் வாய் திறக்கக் கூடாது என உத்தரவு!
திருவள்ளூர்: அமைச்சர் பதவியை பறிகொடுத்த நாசர், ஆவடியில் உள்ள தனது இல்லத்தில் காலை முதலே ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
நாசரை ஆதங்கத்துடன் சந்திக்க வரும் ஆதரவாளர்கள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மீண்டும் நாசருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என தலைமையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.
இதனை அறிந்த நாசர், பதறிப்போய் அது போல் எதுவும் செய்யக்கூடாது என்றும் யாரும் வாயே திறக்கக் கூடாது எனவும் ஆதரவாளர்களுக்கு கட் அண்ட் ரைட் உத்தரவு போட்டிருக்கிறார்.

இது நிரந்தரமல்ல என்றும் நிச்சயம் தலைவர் மீண்டும் எனக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தருவார் எனவும் ஆதரவாளர்களிடம் நம்பிக்கை பொங்க கூறி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் நாசர்.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட வருத்தம் இருப்பினும் அதனை தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடத்தில் நாசர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கிறார்கள் அவரை அவரது வீட்டில் இன்று காலை சந்தித்து திரும்பியவர்கள்.
வழக்கம்போல் சிரித்து பேசவிட்டாலும் ஓரளவு ஸ்மைலிங் முகத்துடன் தன்னை சந்திக்க வந்தவர்களிடத்தில் பேசியிருக்கிறார். அமைச்சர் பதவி தானே போயிருக்கிறது, மாவட்டச் செயலாளர் பதவி இருக்கிறதே அது போதும் என ஆதரவாளர்கள் தங்களை தேற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ஆவடி நாசரை பொறுத்தவரை கொஞ்சம் கோபக்காரர் என்றாலும் தன்னிடத்தில் உதவி கேட்டு வரும் கட்சிக்காரர்களுக்கு அதனை தட்டாமல் செய்து கொடுக்கக் கூடியவர்கள் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
இதனால் தான் அவர் என்னதான் கோபப்பட்டாலும் அதையும் மீறி அவர் பின்னால் நிற்பதாக தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications