சனாதனம்! 2 சுற்றறிக்கையும் வாபஸ்.. திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் பேச்சு போட்டியே ரத்து
திருவாரூர்: அண்ணா பிறந்தநாளையொட்டி சனாதன எதிர்ப்பு பேச்சு போட்டிக்கான சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சனாதன தர்மம் குறித்து மாணவிகள் கருத்துகளை பகிரலாம் என புதிய சுற்றறிக்கை வந்தது.இந்த நிலையில் அந்த சுற்றறிக்கையும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 115 ஆவது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஏற்கெனவே பற்றி எரிந்து கொள்ளும் ஒரு விஷயம் குறித்து பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டு முதல்வர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கேட்டு மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதா என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமனுக்கு பாஜக கண்டனங்களை தெரிவித்தது.
மேலும் அவரை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விலக்கக் கோரி செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று 3 மணிக்கு அந்த திருவிக அரசு கலைக் கல்லூரி முன்பு தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராஜாராமன் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் இக் கல்லூரி சுற்றறிக்கை நாள் 11.09.2023 ல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் கல்லூரி மாணவிகள் அக்கருத்துகளை முதல்வரின் சுற்றறிக்கையின்படி அல்லாமல் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே மேற்காண் பொருள் குறித்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் புதிய சுற்றறிக்கையும் வாபஸ் பெறப்பட்டு பேச்சு போட்டியும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications