குப்பையில் கிடந்த 20 பவுன்! பத்மாவை போல் நேர்மையாளர் துரை! திருவாரூர் தூய்மை பணியாளரின் தூய உள்ளம்!
திருவாரூர்: திருவாரூரில் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகை, 1 கிலோ வெள்ளியை பெண் ஒருவர் தவறவிட்ட நிலையில் அதை தூய்மை பணியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை. இவர் திருவாரூர் நகராட்சித் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை கண்டார்.

அதில் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர், அதை பிரித்து பார்த்து அதிர்ந்து போனார். அதில் 20 பவுன் தங்க நகையும் 1 கிலோ வெள்ளியும் இருந்தது. அதை பார்த்ததும் அவருக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!
இதையடுத்து அந்த நகையை பார்த்ததும் சற்றும் சபலப்படாத துரை, உடனே அவற்றை எடுத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் , துரையை வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் விசாரணையில், சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ராதாகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வந்திருந்தனராம். அப்போது அவர்கள் 20 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் திருவாரூர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் துரை, அந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையறிந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், துரையை அழைத்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் ராதாகிருஷ்ணன், தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகளாம். இந்த நகைகள் கிடைத்ததும் அவரது மனைவி ஆனந்தத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications