திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவாரூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. நாகையில் பள்ளிகளுக்கு மட்டும்!

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் நாகை மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்குவதால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Schools and Colleges declared holiday in Tiruvarur

தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (12.02.2022) தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு இடி மின்னலோடு மழை பெய்யுமாம்... குடை அவசியம் மக்களே டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு இடி மின்னலோடு மழை பெய்யுமாம்... குடை அவசியம் மக்களே

ஞாயிற்று கிழமை - செவ்வாய்கிழமை (13.02.2022 முதல் 15.02.2022) வரை, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Schools and Colleges declared holiday in Tiruvarur

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். அதே நேரத்தில் திருப்புதல் தேர்வு இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்திலும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று 2ஆவது நாளாக மழை தொடரும் என்பதால் நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Schools and Colleges was declared holiday as Heavy rain in Tiruvarur District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X