மானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்
திருவாரூர்: மானியத்தில் விதை கொடுத்தும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ரக நெல்லை பயிரிடுவதிலேயே, தமிழக விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆந்திர பொன்னி என்.எல்.ஆர், ஆர்.என்.ஆர் உள்ளிட்ட ரக நெல் வகைகளை நடவு செய்வதில் தமிழக விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. திருவாரூர், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சம்பா நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்தும் நெல் ரகங்களை தவிர, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கோவை ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை அம்பாசமுத்திரம், பரமக்குடி, திருச்சி உள்ளிட்ட தமிழக ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை 90 முதல் 125 நாட்கள் வரையிலான சன்னம் மற்றும் மோட்டா ரகங்கள் ஆகும். ஆனால் ஆந்திராவில் உள்ள பாபட்லா ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட ஆந்திரா பொன்னி, தொடர் மழை மற்றும் பனியால் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளானாலும், அதிக உற்பத்தி மற்றும் கொள்முதல் விலை போன்றவற்றால் விவசாயிகளை ஈர்த்துள்ளது.
மேலும் இதன் சுவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. அதே போல தெலுங்கானா ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்ட, என்.எல்.ஆர் ஆர்.என்.ஆர் ஆகிய நெல் ரகங்களும் தமிழக விவசாயிகளை ஈர்த்துள்ளன.
மானியத்தில் வழங்கப்படும் தமிழக நெல் ரகங்களை புறக்கணித்துள்ள விவசாயிகள் ஆந்திர மற்றும் தெலுங்கானா ரக விதைகளை, தனியார் கடைகளில் வாங்கி அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வேளாண் அதிகாரிகள், தமிழகத்தில் 90 சதவீதம் ஆந்திரா நெல் ரகங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆந்திரா பொன்னி பயிர் வளர்ந்தாலும் மழை தண்ணீர் ஓடினால் சாயாது. மேலும் அதிக கொள்முதல் விலையால், நம் விவசாயிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாரம்பரிய ரகங்களை தவிர ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ரகங்கள் சந்தைக்கு ஏற்ப விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால், விவசாயிகள் விலை கொடுத்து ஆந்திர மற்றும் தெலுங்கானா ரக விதைகளை ஆர்வமுடன் வாங்கி சாகுபடி செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications