சரியான நடவடிக்கை.. நல்லது.. திருவாரூர் தேர்தல் ரத்துக்கு தமிழிசை வரவேற்பு!
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து சரியான நடவடிக்கையே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து சரியான நடவடிக்கையே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து சரியான நடவடிக்கையே. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை பாஜக வரவேற்கிறது.
திருவாரூருக்கு மட்டும் தனியாக தேர்தல் நடப்பது சரியாக இருக்காது. இந்த முடிவை ஏற்கனவே எதிர்பார்த்தோம். கணிப்பின் அடிப்படையிலேயே திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன்.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து எதிர்பார்த்ததுதான்.. திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பேட்டி!
நாங்கள் நினைத்தது போலவே தற்போது தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.