மலரும் மத நல்லிணக்கம்... காளியம்மன் கோயிலுக்கு சிமெண்ட் மூட்டைகள் அளித்த தமிமுன் அன்சாரி..!
திருவாரூர்: காளியம்மன் கோயிலுக்கு சிமெண்ட் மூட்டைகள் அளித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரிக்கு ஆய்குடி கிராமமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோயில் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார் தமிமுன் அன்சாரி.
நாட்டில் முதல் முறை...வாக்களிக்க லஞ்சம் கொடுத்த டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் ஜெயில்
இஸ்லாமியராக இருப்பினும் கூட பொதுவாழ்க்கை என வந்த பிறகு அனைத்துச் சமூக மக்களையும் அரவணைத்துச் செல்வதில் கவனமாக செயல்படுகிறார் இவர்.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அருகே உள்ள ஆய்குடி என்ற சிறு கிராமத்தில் காளியம்மன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் முழுக்க முழுக்க கிராம மக்களால் கட்டப்படுவதால் அவர்களது சக்திக்குட்பட்ட வகையில் கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியினர் காளியம்மன் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு சிமெண்ட் மூட்டைகள் வழங்கி உதவியுள்ளனர்.
நேரில் பார்வை
இதனை எதிர்பாராத ஆய்குடி கிராம மக்கள் தமிமுன் அன்சாரியை ஒரு முறையாவது கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக நேரில் வரவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பொதக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ஒருவர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சென்ற தமிமுன் அன்சாரி, ஆய்குடி மக்களின் அழைப்பை ஏற்று காளியம்மன் கோயில் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
மகிழ்ச்சி
இஸ்லாமியர் எங்கு இந்து கோயிலுக்கு வரப் போகிறார் என நினைத்த நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தமிமுன் அன்சாரி அங்கு சென்றது ஆய்குடி மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இதனிடையே கட்டுமானப் பணிகளை கவனமுடன் மேற்கொள்ளுமாறு பணியாளர்களை கேட்டுக்கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
டெல்டா
தேர்தலுக்கு பிறகு தஞ்சை, நாகை, திருவாரூர், என டெல்டா மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.