டெல்டாவில் பயிர் சேதம்! ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு தருக! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரும் தமிமுன் அன்சாரி.
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு பாரபட்சமின்றி ரூ.25,000 இழப்பீடு தர வேண்டும் என தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கன மழையால் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் இரண்டாவது நாளாக மஜக பொதுச் செயலாளர்தமிமுன் அன்சாரி சேதத்தை பார்வையிட்டார்.

நேற்று நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட அவர், இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அங்கு கட்டிமேடு, ஆதிங்கம், பாண்டி, பிச்சன்கோட்டகம் பகுதிகளில் மழையில் மூழ்கிய வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது, ''பிப்ரவரி மாத திடீர் மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் இப்பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.''

''சில இடங்களில் கால்வாய்கள் தூர் வாரப்படாததால், மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி விட்டது. இதை அதிகாரிகள் இனி கவனத்தில் கொள்ள வேண்டும்.''
''தமிழக அரசு அறுவடை செய்யாத அனைத்து விவசாயிகளுக்கும் பாராபட்சமின்றி, ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரமும், காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி உரிய முழு இழப்பீடும் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் .''இவ்வாறு பேட்டியளித்தார்.

மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு தானும் சேத விவரங்களை எடுத்துச் செல்லவுள்ளதாக கூறினார். அதேபோல் மூன்றாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட இடங்களில் பார்வையிட போவதாக கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications