“திமுகவிடம் கைநீட்டி பணம் வாங்கியபோதே கம்யூனிஸ்ட் கட்சியின் கதை முடிஞ்சிருச்சு” - எடப்பாடி பழனிசாமி
திருவாரூர்: "கம்யூனிஸ்ட் கட்சிக்கென தனித்தன்மை இருந்தது. மக்கள் பாதிக்கப்பட்டால் கொடி பிடித்து போராடிக் கொண்டிருந்தவர்கள், இன்று திமுக அரசாங்கத்திற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' எனும் பெயரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி இன்று, நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நன்னிலத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, பேருந்தில் இருந்து இறங்கி மாட்டு வண்டி ஓட்டினார். அதைத்தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அவர், "திமுகவில் உறுப்பினர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் ஓரணியில் தமிழ்நாடு வீடு வீடாக வந்து சந்தித்து வருகிறார்கள். யாரும் ஏமாந்து விடாதீர்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையை தூண்ட வேண்டும். ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள் மீண்டும் ஏமாறாதீர்கள்.
50 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை தீர்க்க முடியவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் தீர்ப்பு பெற்றுத் தந்த அரசாங்கம் அதிமுக அரசு. திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிக்கென தனித்தன்மை இருந்தது. மக்கள் பாதிக்கப்பட்டால் கொடி பிடித்து போராடிக் கொண்டிருந்தவர்கள், இன்று திமுக அரசாங்கத்திற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார்கள்.
திமுகவிடம் எப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் கைநீட்டி பணம் வாங்கினார்களோ, அப்பொழுதே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்து விட்டது. பணத்தை வாங்கிய காரணத்தினால் இன்று மௌனம் சாதிக்கிறீர்கள். மக்கள் பிரச்சினையை கூட இன்று வெளியில் கொண்டுவர மாட்டீர்கள். இப்படி இருக்கையில் மக்கள் எப்படி நம்புவார்கள்.
போராட்டம் நடத்தினால் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல் சீட்டை குறைத்து விடுவார்கள். குறை சொல்வதாக எண்ணிவிடாதீர்கள். இருக்கக்கூடிய எதார்த்தத்தை சொல்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு படைத்த இயக்கம். உங்களை குறை சொல்லி நாங்கள் கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்காக உழைத்த கட்சி இன்று தேய்ந்து கொண்டிருக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications