நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு - முதல்வர் பழனிச்சாமி உறுதி
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று கடந்த ஜூலை மாதமே மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருவாரூர் : கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி தேர்வுகளும், கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு நடத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஹால்டிக்கெட்களும் வெளியிடப்பட்டு விட்டன.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப் பட்டது. அந்த வழக்கை கடந்த 17 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என உத்தரவிட்டனர். அதே போல, எந்த காரணத்தை கொண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படாது என தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
நீட் தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடலூரில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தாக்கம் குறைந்தபின் நீட் தேர்வு நடத்துமாறு பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் முடியும் வரை நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
பல லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துள்ளதால் தேர்வுகளை எழுத மாணவர்கள் விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றே மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அமைச்சர்கள், கொரோனா அச்சுறுத்தலால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுதக்கால் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இன்று திருவாரூரில் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும் நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன முதல்வர் பழனிச்சாமி, கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications