கால் வைத்ததும் தொடங்கிய கொடுமை.. குவைத்தில் தமிழர் கொலை.. உண்மையில் நடந்தது என்ன? பின்னணியில் "பெண்"
திருவாரூர்: குவைத்தில் கொலை செய்யப்பட்ட தமிழரின் உடல் இன்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர் அங்கு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒட்டகம் மேய்த்து வந்த அவரை, அவரின் முதலாளி சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
குவைத்தில் ஏமாற்றப்பட்ட அவர்.. அங்கு சென்ற முதல் நாளில் இருந்து மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முத்துக்குமரன்
இவருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். முத்துக்குமரன் ஊரில் மளிகை கடை நடத்தி வந்து நன்றாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கொரோனா காலத்தில் மளிகை கடையில் பெரிய அளவில் 'நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டம் காரணமாக பொருளாதார ரீதியாக அவர் கடுமையாக சிரமப்பட்டு உள்ளார். இதன் காரணமாக சில இடங்களில் இவர் கடனும் வாங்கி உள்ளார். இந்த கடனை அடைக்கவே அவர் குவைத் சென்றுள்ளார்.

குவைத்
இதற்காக தமிழ்நாட்டில் சில ஏஜெண்ட்டுகளை அணுகி வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஏஜெண்ட் மூலம் குவைத்துக்கு சென்றுள்ளார். குவைத்தில் மெடிக்கல் கடை ஒன்றில் வேலை பார்க்க வேண்டும். அந்த கடைக்கு அவ்வப்போது ஓட்டுனராகவும் இருக்க வேண்டும் என்றுதான் இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை நம்பித்தான் அவரும் வேலைக்கு சேர்ந்துள்ளார். நம்பிக்கையான இடம், தாராளமாக செல்லலாம் என்று ஏஜெண்ட்டும் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

ஏஜெண்ட்
அவர் குவைத்தில் கால் வைத்து 30 நிமிடத்தில் காரில் ஒரு இடத்திற்கு கூட்டி செல்லப்பட்டு உள்ளார். கார் 2 மணி நேரம் பயணித்து பாலைவனம் ஒன்றுக்கு சென்றுள்ளது. அங்கே இறக்கிவிடப்பட்ட இவரிடம் ஒட்டகம் மேய்க்க சொல்லி உள்ளனர். அங்கே இறக்கிவிடப்பட்ட சில நிமிடத்தில் இவரை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். சரியாக தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். மோசமாக தாக்கியும் உள்ளனர்.

என்ன நடந்தது?
இதையடுத்து முத்துக்குமரன் உடனே தனது வீட்டிற்கு போன் செய்து சொல்லி இருக்கிறார். குடும்பத்தினர் இதை பற்றி ஏஜெண்டிடம் பேசி உள்ளனர். ஆனால் ஏஜெண்ட்.. போனவர்.. போனவர்தான். உடனே எல்லாம் திருப்பி கொண்டு வர முடியாது. ஒப்பந்தம் முடியும் வரை அங்குதான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அவர்களின் குடும்பம் திட்டமிட்டது. ஆனால் அதற்கு இடையில் முத்துக்குமரன் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உடல்
குவைத்தில் கொலை செய்யப்பட்ட தமிழரின் உடல் இன்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார்.இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர் அங்கு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒட்டகம் மேய்த்து வந்த அவரை, அவரின் முதலாளி சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. குவைத்தில் ஏமாற்றப்பட்ட அவர்.. அங்கு சென்ற முதல் நாளில் இருந்து மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications