கலர் கலரா மாறி வரும் அமெரிக்க இலைகள்.. நாடே அழகா இருக்குங்க!
நாகர்கோவில்: மரங்களில் யாரப்பா வானவில்லை நிரப்பி வைத்தது.. இப்படி கவிதை எழுதலாம் போல.. அமெரிக்க மரங்களைப் பார்த்தால்.
அப்படி ஒரு அழகுத் தோரணங்களாக மாறி காட்சி அளிக்கிறது அமெரிக்காவே. அமெரிக்கா இப்போ ரொம்ப ரொம்ப வண்ணமயமா இருக்கு. காரணம் அங்க இப்போ தான் அழகான இலையுதிர் காலம்.
அமெரிக்காவின் அழகான இலையுதிர் காலத்தில் இங்குள்ள மரங்களில் இலைகள் எல்லாம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன் என்று ஒவ்வொரு வண்ணத்திலும் மாறி பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கும்.

அந்த நேரத்தில் தான் நம்ம ஊரு சினிமாக்காரங்க கூட முதல் மழை என்னை நனைத்ததே என்று டூயட் பாடல் எடுக்க கிளம்பி போய்டுவாங்க. இந்த ஊரு மக்கள் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் , குளிர் காலம் என்று பல காலங்கள் இருந்தாலும் உங்களுக்கு பிடிச்ச சீசன் என்ன என்று கேட்டால் ரொம்பவும் குளிராம ரொம்பவும் வெயில் சுட்டெரிக்காமல் இருக்கிற இந்த இலையுதிர் காலம் தான் சூப்பர் என்றகிறார்கள்.
எது எப்படியோ இந்த இலைகளின் அழகை பார்த்துக்கொண்டு ஒரு நதிக்கரையில் நடப்பதோ வண்டியை எடுத்துட்டு இரண்டு பக்க மரங்களின் அழகை பார்த்துட்டு அப்படியே நீண்ட தூர பயணம் போவதோ இந்த சீசனில் ரொம்ப சூப்பர் ... அப்படியான ஒரு கலர்புல் பயணத்தின் அனுபவத்தை வீடியோ வடிவில் உங்களுக்காக இங்கே..
- Inkpena சஹாயா












Click it and Unblock the Notifications