நெல்லை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு -ஹவுஸ் சர்ஜன்கள் ஸ்டிரைக் வாபஸ் ..
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை காரணமாக பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் டீன் கூறுகையில்,அரசு மருத்துவமனையில் 10 தனியார் பாதுகாவலர்களை ஞாயிற்று கிழமை முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை இன்று முதல் 20 ஆக உயர்த்தப்படுகிறது. இவர்கள் இரண்டு ஷிப்டாக பணியாற்றுவார்கள்.
வாளகத்தில் உள்ள ஐகிரவுண்ட் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இன்னும் ஒரு வாரத்திற்குள் கூடுதலாக முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். 1ம் தேதி முதல் பார்வையாளர் நேரம் அமல்படு்தப்படும்.
பார்வையாளர்களுக்கு கேட் பாஸ் வழங்கி குறிப்பிட்ட நேரம் மட்டும் நோயாளிகளை சந்தித்து திரும்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
டாக்டர்கள் நர்ஸ்கள், பயி்ற்சி டாக்டர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். தனியார் வாகனங்கள் உள்ளே வந்தவுடன் நோயாளிகளை இறக்கி விட்டு உடனே வெளியேறி விடவும், பிற வாகனங்களை கட்டுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
எல்லாவற்றுக்கும் மேலாக டாக்டர்கள் இடையூறு இன்றி மருத்துவ சேவை செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோயாளிகளை பார்க்க கூட்டமாக வர கூடாது. இதனால் பல நோயாளிகளுக்கு சிகிச்சை பணி பாதிக்கப்படுகிறது. இடையூறு ஏற்படுகிறது.
எனவே மருத்துவமனை நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications