21 ஆண்டுகளுக்கு முன் நக்சல்கள் கொலை முயற்சி-திருப்பதியில் கண்கலங்கி நினைவுகூர்ந்த சந்திரபாபு நாயுடு!
திருப்பதி: 21 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட்டுகள் தம்மை திருப்பதியில் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்து கொல்ல முயன்ற சம்பவத்தை கலங்கிய கண்களுடன் நேற்று திருப்பதி செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று 4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு நாயுடு. முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிவில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார் சந்திரபாபு நாயுடு. இதற்காக நேற்று முன் தினம் இரவே திருமலை வந்து குடும்பத்துடன் தங்கினார் சந்திரபாபு நாயுடு. அதிகாலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக உருமாறும். இதில் தெலுங்கு பேசும் மக்கள் முதல் இடத்தில் நம்பர் ஒன்னாக இருக்க எங்களுக்கு பலத்தை தா ஆண்டவா என ஏழுமலையானிடம் பிரார்த்தித்தேன்.
திருப்பதி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவன். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததுமே திருப்பதி ஏழுமலையாத்தான் வணங்குவேன். எனக்கு குல தெய்வமே ஏழுமலையான்தான். இளம் பிராயத்தில் நடந்து செல்லும் ஒவ்வொரு பொழுதும் ஏழுமலையானைத்தான் தரிசனம் செய்வேன்.
இதே திருப்பதி மலைப்பாதையில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் என் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது (நக்சலைட்டுகள்- மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல்). அதையும் எதிர்கொண்டேன். அதேபோல கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனையும் எதிர்கொண்டேன். இத்தனை சவால்களையும் நான் தைரியமாக எதிர்கொண்டு முறியடிக்க எனக்கு பலமாக இருந்ததும் இந்த ஏழுமலையான்தான்.
ஒவ்வொரு இந்துவும் தமது வாழ்நாளில் தரிசனம் செய்தாக வேண்டிய திருத்தலமாக திருப்பதியை மாற்றுவேன். இந்த திருமலையின் புனிதம் முழுமையாகக் காப்பாற்றப்படும். இத்திருமலையில் கோவிந்தனின் திருநாமம் மட்டும்தான் ஒலிக்கும். நான் முன்னெடுத்து வரும் இலக்குகளை அடைய ஏழுமலையான் எனக்கு போதுமான வலிமையைத் தருவார் என நம்பிக்கை கொள்கிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
திருப்பதியைத் தொடர்ந்து திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசனம் செய்தார் சந்திரபாபு நாயுடு. இதன் பின்னரே ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்று கோப்புகளில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications