பழைய வீட்டுக்கா?.. மகள்களின் நினைவுகள் வாட்டுமே.. நரபலி கொடுத்த ஆந்திரா தம்பதி கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இனி வீட்டுக்குச் சென்றால் மகள்களின் நினைவுகள் வாட்டுமே என ஆந்திராவில் மகள்களை நரபலி கொடுத்த தம்பதி மனநல ஆலோசனைக்கு பிறகு கண்ணீர் விட்டனர். மேலும் அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பெற்றோர்களால் அகல்யா, சாய் திவ்யா ஆகிய இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். பெற்றோர் இருவரும் நன்கு படித்தவர்கள்.

நரபலி

நரபலி

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பெற்ற தாயான பத்மஜாவும் இரண்டாவது குற்றவாளியாக தந்தை புருஷோத்தம் நாயுடுவும் கைது செய்யப்பட்டனர். மகள்களை நரபலி கொடுத்தால் தங்கள் அதீத சக்தி கிடைக்கும் என்றும் அந்த சக்தி மூலம் தங்கள் மகள்களுக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்கள்.

திருப்பதி மருத்துவமனை

திருப்பதி மருத்துவமனை

இதையடுத்து பெற்றோருக்கு திருப்பதி மருத்துவமனை மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மதனப்பள்ளி கிளைச்சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

மகள்களின் நினைவுகள்

மகள்களின் நினைவுகள்

இந்த நிலையில் இருவருக்கும் நேற்று மாலை ஜாமீன் கிடைத்ததும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களது உறவினர்களின் காரில் ஏறி சென்றனர். ஏற்கெனவே வசித்து வந்த வீட்டுக்கு தம்பதி செல்லவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு மீண்டும் அதே வீட்டுக்கு சென்றால் மகள்களின் நினைவுகள் எங்களை வாட்டும்.

பாவம்

பாவம்

மூடநம்பிக்கையால் நாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம். நாங்கள் செய்த பாவத்தை போக்க அன்னதானம் செய்தும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிகள் அளித்தும் எங்கள் காலத்தை கழிக்க போவதாக பத்மஜாவும் புருஷோத்தம் நாயுடுவும் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+