Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை தேவஸ்தான கோவில்கள் நடை மூடப்படும் எனவும் பரிகார பூஜைகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பணக்கார கோவில் திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோவில். இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வருகை தருகின்றனர். சேஷாத்திரி, நீலாத்திரி,கருடாத்திரி,அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு திருநாமம் உள்ளது. திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

Chandra Grahanam 2023: Tirupati Balaji Temple Dharsanam cancelled 8 hours on 28th October

புரட்டாசி மாதம் தொடர் விடுமுறையால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் காரணமாக நேரடியாக எந்தவித டோக்கன்களும் இல்லாமல் வரும் பக்தர்கள் வரிசை 10 கிலோ மீட்டர் வரை வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். சாமி தரிசனத்திற்கு 42 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நாளையும் திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆண்டின் கடைசி சூரிய மற்றும் சந்திர கிரகணம் அடுத்த மாதம் அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 29 ஆம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும்.

ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி 8 மணி நேரத்திற்கு மேல் மூடப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் 28ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29 அன்று மீண்டும் திறக்கப்படும். 29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும். எனவே 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையாம் கோயில் கதவுகள் மூடப்படும்.

கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவை நடைபெறும். எனவே சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் எட்டு மணி நேரம் மூடப்படும். இதன் காரணமாக 28 ஆம் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+