வேண்டுதலை நிறைவேற்று ஏழுமலையானே.. திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்ற முதல்வர் பழனிச்சாமி
திருப்பதி: திருப்பதி திருமலையில வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தல் முடிந்த பின் திருப்பதி ஏழுமலையானை சென்று தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் அண்மையில் தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் சென்றுவந்தனர்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது குடும்பத்தோடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் திருப்பதி திருமலைககு புறப்பட்டு சென்றார்.
திங்கள் கிழமை மாலை திருமலை சென்றடைந்த முதல்வர் பழனிச்சாமியை திருப்பதி தேவஸ்தான துணைச் செயல் அலுவலர் பாலாஜி மலர்செண்டு வழங்கி வரவேற்று அழைத்துச் சென்றார்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மாளிகையில் முதல்வர் பழனிச்சாமி இன்று இரவு தங்குகிறார். அத்துடன் இன்று இரவு வராக சுவாமி, ஹயக்ரீவர் கோவில்களில் வழிபாடு செய்யும் முதல்வர், நாளை (செவ்வாய்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications