திருப்பதிக்கு போறீங்களா.. இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க.. தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள்
திருப்பதி: திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சென்று வரும் நிலையில், வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் சிறப்பு விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

தினந்தோறும் ஏராளமான மக்கள் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வதால் எப்போது கூட்டம் அதிகரித்தே காணப்படும். திருப்பதிக்கு பேருந்து, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதற்கான வந்து செல்கின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து செல்லும் நிலையில், மலைப் பாதையை விரிவாக்கம் செய்து தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் வாகனங்களை பக்தர்கள் மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் விபத்தை தவிர்க்கும் வகையில், தங்களுடைய பயணத் திட்டத்தை மாற்றியமைத்து 1 மணி நேரம் முன்னதாக கோவிலுக்கு வர வேண்டும் என்றும், வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலவச தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 16 மணி நேரம் காத்திருந்து நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். 69 ஆயிரத்து 609 பேர் நேற்று தரிசனம் செய்துள்ளனர். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ. 4.11 கோடி வசூலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications