திருப்பதி வந்தா திருப்பம்.. பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேராக திருமலைக்கு செல்லும் பிரதமர் மோடி!
திருப்பதி: பிரதமர் மோடி இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி செல்ல உள்ளார். அவர் நாளை காலையில் ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளார். மோடி வருகையையொட்டி திருப்பதியில் அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ன. இந்த முறை எப்படியாவது ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பாஜகவும், காங்கிரஸும் மிக தீவிரமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா என கட்சியின் முக்கிய புள்ளிகள் தெலங்கானாவில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தெலுங்கானாவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 7 மணியளவில் திருப்பதி செல்கிகிறார். விமானம் மூலம் புறப்பட்டு, திருப்பதிக்கு இரவு 7 மணிக்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு ஓய்வு எடுக்கிறார். பின்னர், நாளை (நவம்பர் 27) காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார்.
பிரதமர் மோடியின் திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முதல் திருமலை வரை பிரதமர் பயணம் செய்ய இருக்கும் வழித்தடம், அவர் திருமலையில் தங்க இருக்கும் விருந்தினர் மாளிகை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகை தருவதையொட்டி, நாளைய தினம் (நவம்பர் 27) விஜபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது, நவம்பர் 27ம் தேதி விஐபி தரிசனம் ரத்து என்றும், நவம்பர் 26ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா தேர்தல் நெருங்கும் நிலையில், 5 மாநில ரிசல்ட் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் திருப்பதியில் தரிசனம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரதமர் மோடிக்கும் இந்த தரிசனம் திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications