திருப்பதிக்கு செல்ல ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்! சித்திரை 1-க்கு போட்டா போட்டி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. அப்போது 4.38 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. அவை முற்றிலும் விற்பனையாக அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.
ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் புக்கிங் சற்றுதாமதமானது. வார நாட்களில் புக்கிங் செய்ய பலர் முன்வராததால் அந்த டிக்கெட்டுகள் அப்படியே இருந்தன. பின்னர் சிறிது நேரம் கழித்து தீர்ந்தது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் அன்றைய தினம் மக்கள் வேகமாக புக்கிங் செய்தனர். சித்திரை 1 திங்கள்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை என்பதால் அந்த தேதியில் புக்கிங் செய்ய கடும் போட்டி ஏற்பட்டது.

திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் ரூ 300 தரிசன டிக்கெட், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், ஆர்ஜித சேவைகள் மூலமாக பெருமாளை தரிசிக்கிறார்கள்.
ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான அங்கப்பிரதட்சிண சேவைக்கான டிக்கெட்டுகள் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டன.
சுமார் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியான நிலையில் 3 நிமிடங்களில் தீர்த்துவிட்டன. அது போல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் இன்றைய தினம் ஏப்ரல் மாதம் ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. சுமார் 4.38 லட்சம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரிலீஸ் செய்தது. அவை சற்று தாமதமாகவே புக்கிங் ஆனது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் மொத்த டிக்கெட்டுகளும் புக்காகின.
இன்று மதியம் 3 மணிக்கு ஏப்ரல் மாதம் சிறப்பு தரிசன டோக்கன்களை பெற்றவர்கள் தங்குவதற்கான அறைக்கான முன் பதிவு நடைபெறும். திருப்பதி, திருமலை, தலகோணம் ஆகிய பகுதிகளில் அறை எடுத்துக் கொள்ளலாம். ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்தவர்கள் மட்டுமே அறை எடுக்க புக்கிங்கில் கலந்து கொள்ளலாம். ஆனால் புக் செய்த எல்லாருக்கும் அறை கிடைக்காது.












Click it and Unblock the Notifications