திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுத்த பெங்களூர் பக்தர்கள்.. எவ்வளவு தெரியுமா?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கம், வைரம், பணம், தங்கக் காசுகள் போன்றவற்றை சுவாமிக்கு காணிக்கையாச் செலுத்தி வரும் நிலையில், கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், இன்னொரு பக்தர் ஒருவர் வைரங்கள், வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி சங்கிலியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. நினைத்த போதெல்லாம் திருப்பதிக்கு பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

வனப்பகுதிக்கு நடுவே
கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேஷாசலம் என்ற மலையில் இந்த திருப்பதி திருமலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுது பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக ஏராளமான மதிப்புக்க மிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கை
தங்கக் காசுகள், தங்க ஆபரணங்கள், வைர அணிகலன்கள், பணம் போன்றவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி தொகையை நன்கொடையாக அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இன்னொரு பக்தர் ஒருவர் வைரங்கள், வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி சங்கிலியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் நபர்
பெங்களூரைச் சேர்ந்தவர் கல்யாண் ராமன் கிருஷ்ணன். இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நன்கொடையின் மூலமாக ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. கல்யாண் அளித்த செக் ஆனது திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்தர் காணிக்கை
அதேபோல, பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு பக்தரான மூர்த்தி என்பவர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 148 கிராம் எடை கொண்ட வைரம் மற்றும் வைஜயந்தி பதித்த தங்க லட்சுமி சங்கிலியை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications