Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பௌர்ணமிக்கு போகப் போறீங்களா.. மேஜர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடப்பது வழக்கம். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சூழலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நாட்களில் நடக்கும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன சேவைக்கு மிக உயர்ந்த இடம் உண்டு. ஏனெனில் திருமாலின் வாகனமும் பக்தரும்: கருடாழ்வார் பெருமாளின் பிரதான வாகனமாகவும், அதே சமயம் அவருடைய முதன்மை பக்தராகவும் (பரமபாகவதர்) கருதப்படுகிறார்.

Tirupati Pournami Garuda Seva has been cancelled important announcement for devotees

கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வரும்போது, கருடன் மீது அமர்ந்து வரும் பெருமாளைத் தரிசிப்பது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் நடைபெறும் இந்த சேவை, பக்தர்களுக்கு ஒரு மன அமைதியையும், பெருமாளின் அருளையும் வழங்குவதாகக் கருதப்படுகிறது. இந்த சூழலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நாட்களில் நடக்கும் பவுர்ணமி கருடசேவை ரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடப்பது வழக்கம். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.

அமராவதி.. சந்திரபாபு நாயுடுவின் 12 வருட கனவு நிறைவேறிவிட்டது.. இனி தான் ரியல் சவால் ஆரம்பம்
அமராவதி.. சந்திரபாபு நாயுடுவின் 12 வருட கனவு நிறைவேறிவிட்டது.. இனி தான் ரியல் சவால் ஆரம்பம்

அதேபோல், இந்த ஆண்டு (2026) ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கருடசேவை நடக்க உள்ளது. இந்தப் பவுர்ணமி கருடசேவை கோவிலில் நடக்கும் ஒரு ஆன்மிக நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

அதன்படி மே 1-ந்தேதி, மே 31-ந்தேதி, ஜூன் 29-ந்தேதி, ஜூலை 29-ந்தேதி, ஆகஸ்டு 28-ந்தேதி, செப்டம்பர் 26-ந்தேதி, அக்டோபர் 26-ந்தேதியில் கருடசேவை நடக்கிறது.

அதேநேரத்தில் நவம்பர் 24-ந்தேதி கார்த்திகை தீப உற்சவம் நடப்பதாலும், டிசம்பர் 24-ந்தேதி அத்யாயன உற்சவம் நடப்பதாலும் பவுர்ணமி கருட வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் திருமலைக்குத் திட்டமிட்டு வர வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை எ.வ.வேலு வேட்பு மனுவில் வயது சர்ச்சை.. அதிமுகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஏற்பு
திருவண்ணாமலை எ.வ.வேலு வேட்பு மனுவில் வயது சர்ச்சை.. அதிமுகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஏற்பு

கார்த்திகை தீபம் மற்றும் அத்யாயன உற்சவம் போன்றவை கோவில் நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வுகள். எனவே இந்த உற்சவங்களுக்கு அதிக நேரம் மற்றும் கோவிலின் பிரதான வீதிகள் தேவைப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நாட்களில், வழக்கமான சேவைகளை நடத்துவது நெரிசலை அதிகரிக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பிரதான உற்சவங்கள் எவ்விதத் தடையுமின்றி நடக்கவும் மற்ற சேவைகள் அந்த நாட்களில் தவிர்க்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+