திருப்பதி ஏழுமலையான் கோயிலில் Pre Wedding Shoot! முகம் சுளித்த பக்தர்கள்! மன்னிப்பு கேட்ட மாப்பிள்ளை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முன் விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்திய புதுமணத் தம்பதி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டது வைரலாகி வருகிறது. மேலும் அந்த போட்டோஷூட்டில் அவர்கள் பக்தர்கள் முகம் சுளிக்க வைக்கும் விஷயத்தையும் செய்திருந்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் திருமால். அதே பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர்களுக்கு திருமலை திருப்பதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு ஏழுமலையான் கோயில் முன் இருக்கும் காலி இடங்களில் போட்டோ ஷூட் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

அப்போது காயத்ரியின் நெற்றியில் திருமால் முத்தமிடுவது போன்றும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும் போட்டோ ஷூட் எடுப்பது விதிகளையும் தடையையும் மீறிய செயலாகும்.
இந்த நிலையில் அந்த புதுமண தம்பதி, தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். ஏழுமலையான் கோயில் முழுவதும் 1600 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் நிபந்தனைகளை மீறி புதுமணத் தம்பதி போட்டோஷூட் எடுத்ததை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இவர்கள் போட்டோ ஷூட் எடுத்த இடங்கள் எல்லாம் மிகவும் முக்கியமான பகுதிகளாகும். அதாவது கொல்ல மண்டபம் முதல் அகிலாண்டம் பகுதி வரை இவர்கள் போட்டோ ஷூட் எடுத்தனர். இந்த பகுதிகளில் போட்டோ, வீடியோ எடுப்பதும் ரீல்ஸ் எடுப்பதும் கூடாது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பாதுகாப்பான பகுதிகளில் புதுமணத் தம்பதியும் கேமராமேனும் போட்டோ எடுத்த போது அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை. ஒரு கோயில் வளாகத்தில் இப்படியெல்லாம் போட்டோ ஷூட் நடத்தியும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது அவர்களது அலட்சிய போக்கை காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் சன்னிதிக்கு நேர் எதிரே தம்பதியினர் போஸ் கொடுத்து, நெருக்கமான சைகைகளைப் பரிமாறிக்கொண்டதுடன், அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியதாகச் சாட்சிகள் கூறினர். பக்தர்கள் அருகிலிருந்தபோதிலும், கேமராமேன்கள் காட்சிகளைத் தீவிரமாகப் பதிவு செய்வதைக் காண முடிந்தது. குறிப்பாக, உணர்ச்சிகரமான மற்றும் கூட்டமான அந்தப் பகுதியில் இருந்து பாதுகாப்புப் பணியாளர்களின் உடனடிப் பதில் இல்லாதது பக்தர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோயிலுக்கு அருகில் இதுபோன்ற புகைப்படப் படப்பிடிப்புகள் மீண்டும் மீண்டும் நடப்பது குறித்து பக்தர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். இத்தகைய செயல்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கையுடன் வரும் திருமலையின் புனிதத்தன்மையைக் கெடுப்பதாகவும் பலர் நம்புகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கண்காணிப்பு மற்றும் கூட்டம் கட்டுப்பாடு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் பக்தர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
மத முக்கியத்துவம் வாய்ந்த திருமலைக்கு வரும் பார்வையாளர்கள் எந்நேரமும் கண்ணியத்தைப் பேணுவது அவசியம். உறுதியான நடவடிக்கைகள் தெளிவான செய்தியை அளிக்கும் என்றும், இந்து மதத்தின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான திருமலையின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க உதவும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் மன்னிப்பு வீடியோவில் திருமால் கூறியிருப்பதாவது: திருப்பதியில் எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னர் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தினோம். மிகவும் பாதுகாப்புக்குரிய பகுதிகளில் போட்டோ ஷூட் எடுக்கக் கூடாது என எங்களுக்கு உண்மையில் தெரியாது. இனி அது போல் செய்ய மாட்டோம். தவறு என தெரிந்ததும், அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டோம். நாங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications